Tuesday, November 29, 2016

ஊற்று






ஜெ,

சொல்வளர்காட்டின் prequel என்று கிராதம் நாவலைச் சொல்லலாம். சொல்வளர்காடு வேதம் எப்படி புரிந்துகொள்ளப்பட்டது, அதன் school கள் எப்படி வெவ்வேறு காடுகளிலாகச் செயல்பட்டன என்பதைப்பற்றிப் பேசுகிறது. இந்நாவல் வெவ்வேறு source களிலிருந்து எப்படி வேதம் ஊற்று எடுத்துவந்தது என்பதைக்காட்டுகிறது.

வேதங்கள் அசுரர்களிடமிருந்து வந்தன என்பதே பெரிய செய்தி எனக்கு. பல்வேறு வேதங்களின் கலவையாக உருவாகி வந்த வேதங்கள் எப்படி ஒரு நால்வேத அமைப்புக்குள் வந்து அமைந்தன என்பதும் அதற்குள் நடந்த conflict களும் அதன் சண்டைகளும் சமரசங்களும் இந்நாவலில் உள்ளன.

 குறிப்பாக இப்போது வந்துகொண்டிருக்கும் விருதிராசுர வதம் பகுதிதான் வேதங்கள் உருவான வரலாற்றின்  மிகச்சிறந்த சித்திரம். ஆனால் ஒரு காமிக் போலவும் ஒரு folklore போலவும் சொல்லப்பட்டிருக்கிறது

கணேஷ்