Sunday, November 13, 2016

மனப்பால்



அன்புள்ள ஜெ

அர்ஜுனன் ஜாதவேதனின் குழந்தையுடன் திரும்பிவரும்போது தன் சுட்டுவிரலை வைத்து குழந்தைக்குப்பாலூட்டும் இடம் மிகமிக அற்புதமானது. அவன் நரகத்தில் அவனை மீட்ட அந்த அன்னையின் முலையைத்தானே தன் அம்பாகக்கொண்டு வந்திருக்கிறான். யமன் அளித்த தண்டாயுதம் அதுதானே? 

அந்த இடம் மாந்தாதாவை நினைவூட்டியது. அவனும் சுட்டுவிரலால் அந்த மகனுக்கு பாலூட்டினான். எல்லா அப்பாக்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும். விரலை குழந்தை வாயில் வைத்து சப்பக்கொடுத்திருப்பார்கள். அப்போது மனம் கனிந்து குழந்திக்கு ஆயுரம் மடங்கு பாலை ஊட்டியிருப்பார்கள் இல்லையா? மனப்பால் என்பது அதுதானே?


ஸ்ரீனிவாசன்