Wednesday, November 30, 2016

மும்முகன்



ஜெ

த்ரிசிரஸின் கதையை மூன்று கோணங்களில் சொல்லியிருக்கிறீர்கள். முன்னர் ஒருகதை வந்தது. இப்போது இரண்டுகதைகள். முதல்கதை ஆன்மிகமான உருவகம்.இப்போது இருவகை பார்வைகளின் அடையாளம்

திரிசிரசுக்கும் நம்மூரில் சிவனை திரிசிரஸாக வழிபடுவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? நான்முகப்பிரம்மனுக்கு முந்தைய மும்முக பிரஜாபதி அவர் என சண்டன் ஒருவரி சொல்கிறார். முக்கியமான திறப்பு அது

ஜெயராமன்