Monday, November 28, 2016

பழுத்த உண்மை




ஜெ

அந்தணனாக வந்து இந்திரன் சொல்லும் இந்த வரிகளை நான் மிகவும் கவனித்தேன். இது ஒரு லௌகீக ஞானமாக நம் இல்லங்களில் மூத்தவர்கள் அடிக்கடிச் சொல்லும் விஷயமாக இருக்கிறது

அணிகொள்கையில் ஒரு குறை வை.  
அன்னமுண்ணும்போது ஒரு துளி கசப்பும் இலையில் வை. 
செல்வக்குவையில் ஒரு பிடி அள்ளி பிறருக்கு அளி. 
அரசே, இல்லத்தில் ஒரு சாளரக்கதவை எப்போதும் மூடி வை. 
அகல்களில் ஒன்றில் சுடரில்லாமலிருக்கட்டும்

எதுவும் மிதமிஞ்சி முழுமையாக அடையப்படக்கூடாது என்பது ஒருவகையான பழுத்த உண்மை என்ரே எனக்கும் தோன்றுகிறது

சுந்தரராமன்