Saturday, November 12, 2016

யமபுரி



அன்புள்ள ஜெமோ

வெண்முரசின் இந்தப்பகுதியை வாசித்துவாசித்துத் தீரவில்லை. அர்ஜுனன் யமபுரிக்குச் சென்று மரணத்துடன் போரிடுகிறான். நரகங்கள் ஒவ்வொன்றிலும் அவன் பார்ப்பது முன்னோர்களை. அவன் ஆழ்மனசுக்குள் அவர்களெல்லாம் அங்கேதான் இருக்கிறார்கள் இல்லையா?

கச்சனை மனசிலே வரித்த தேவயானி யயாதியை ஏமாற்றியவள். அவள் நரகத்திலேதான் இருப்பாள். ஆனால் துஷ்யந்தன் நரகத்தில் மகிழ்ச்சியாகத் திளைப்பதை வாசித்ததும் ஒரு வகையான சிரிப்புதான் வந்தது


செல்வகுமார்