Tuesday, November 22, 2016

பேருருவங்கள்



ஜெ

இன்றைய வெண்முரசில் ஒருவரி நெடுநேரம் என்னை சிந்தனையில் ஆழ்த்தியது. வெண்முரசின் அழகே இப்படிப்பட்ட வரிகள். கவிதைகளில்தான் இவற்றை நம்மால் வாசிக்கமுடியும்

பேருருவ இருப்புகள் அண்மையை நடிக்கத் தெரிந்தவை. அணுகுபவனை நோக்கி சேய்மையில் நின்று நகைக்கக்கூடியவை

என்வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் நான் உணர்ந்துகொண்டிருக்கும் லௌகீக அனுபவம் இது ஜெ. நீங்கள் இதை தத்துவார்த்தமாகச் சொல்லியிருக்கலாம். காலம், பிரம்மம் என்றெல்லாம் அர்த்தமிருக்கலாம். எனக்கு கண்கூடு. மனிதர்களைப்பற்றியது

நான் கடிதமெழுதுவதில்லை. திருத்திவாசிக்கவும்


குமரேசன்