Monday, February 15, 2016

தொடக்கம்


கடந்த வாரத்தில் வந்த அத்தியாயங்கள் ஒட்டுமொத்த வெண்முரசு நாவல்களின் போக்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் பகுதிகளாக திகழ்கின்றன.

மிகுந்த அன்புடன் வரும் துரியனுடன்சர்வ ஜாக்கிரதையாக வருகிறான் கர்ணன். அவன் தானாக விரும்பி சென்று கேட்டறிந்த காண்டவ வன எரிப்பு தொடர்ந்து வரும் 'தற்செயல்' நிகழ்வுகள் நல்ல மாலையாக கோர்க்கப்பட்டுள்ளன. 'தற்செயலான' மகத- ஹஸ்தினாபுரியின் கூட்டணிக்கான திடீர் அரசியல் சதுரங்கமாகவே இன்று குந்தியின் அரியணை பரிசை புரிந்து கொள்ள முடிகிறது. அங்க நாட்டிற்கென தனி தேர்கூட அளிக்காதவர்கள் இன்று கர்ணனுக்கு தனி அரியணை அளிக்க முன்வருகிறார்கள்.. அதை வேண்டாமென மறுக்கும் வெய்யோனின் மனம் அவன்இந்த அரசியலுக்குள் இல்லை என்பதை காட்டுவதாகவே உள்ளது.

காளிப்பிரசாத்