Saturday, February 13, 2016

யா தேவி!



அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

         வணக்கம்,யா தேவி என்று கர்ணன் திரௌபதியை துதிக்க தொடங்கும் போதே.பிரயாகையில் திரௌபதியின் பின்னே தொடர்ந்து வந்த அந்த சார்வாகன் நினைவே நிழலாடியது.கிட்டதட்ட இந்திரபிரஸ்தம் வரும் அனைவருமே அந்த சார்வாங்கன் நிலையிலே உள்ளனர்.பஞ்சாலியை மறக்கமுடியாத கர்ணன்,மணிமுடி துறக்க தயாராகும் துரியன்,ஜராசந்தன் என்று கணக்கு நீள்கிறது .நன்றி
 
இப்படிக்கு
குணசேகரன்