Saturday, February 6, 2016

வியாசரின் வேள்வி





ஜெ

வியாசரைப்பற்றிய குறிப்பு நாவலில் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது. மூலமகாபாரதத்தில் வியாசர் வந்துகொண்டே இருப்பார். பலவிஷயங்களை அவர்தான் செய்துவைப்பார். அதாவது ஐந்துபேரும் ஒரே மனைவியைக் கல்யாணம்செய்வதுபோன்ற இக்கட்டான நிலை வந்தால் அவரே வந்து அதை செய்துவைத்து விளக்குவார். அது ஒவ்வாத கதைச்சொல்லல் என்னும் என்ணம் எனக்கிருந்தது. ஆனால் இப்போது நீங்கள் அதையே எல்லாமே வியாசனின் கதை என்ற அளவிலேயே கொண்டுசெல்லும்போது அந்த மூலத்தில் வியாசனும் நேரடியாகவந்து கதையை நடத்திவைப்பதும் அதேதானே என்ற எண்ணம் ஏற்படுகிறது. சூட்சுமமான இடங்கள் இவையெல்லாம்

சித்ரா