Thursday, February 18, 2016

துணைவன்



வணக்கம். நான் உங்கள் இணைய தளத்தை சில வருடங்களாகப் படித்து வருகிறேன். வெண்முரசும் தான். எதிரில் நீங்கள் இருப்பது போல் நினைத்துக்  கொண்டு மனசுக்குள் பல நூறுமுறை உரையாடியதுண்டு. சில வருடங்களாக குடும்பத்தில் பல பிரச்சனைகள், சிக்கல்கள். வாழ்க்கையே வெறுப்பாக இருக்கும்போது தான் வெய்யோன் வந்தான். ஒரு பெண்ணாக இருந்தாலும் கர்ணனில் என்னை அடையாளம் காண முடிகிறது. கர்ணன், அர்ஜுனன் எல்லாம் மனதளவில் மிகவும் தனிமையானவர்கள் என்று திரௌபதியின் தோழி சொல்வாள். கவலைகளை சொல்ல நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் இருந்தாலும், அவர்கள் என் மீது அன்பும் பரிவும்  கொண்டிருந்தாலும், என் தவிப்பும் மன உளைச்சலும் வெய்யோனுக்கு மட்டுமே புரியும். ஆயிரம் பேர் சூழ இருந்தாலும் முற்றிலும் தனியனாக நிற்கும் அவனில் என் ஆடிப்பாவையை நான் கண்டேன். நன்றி, எனக்கு ஒரு நண்பன் அளித்ததற்கு.

எம்