Monday, February 8, 2016

செந்தமிழ்

 
 
 
அன்புள்ள ஜெ,

ஆர். மாணிக்கவாசகம் எழுதியதை நான் பல தடவை உணர்ந்திருக்கிறேன். வெண்முரசு அதன் பெறுங்காவிய தன்மையையும் தாண்டி தமிழின் கலைக் களஞ்சியமாக நீண்ட நாள் நிற்கப் போவது உறுதி. 

தமிழ் மொழியை நவீனமாக்கிய  ஆளுமைகளில் பாரதி, புதுமை பித்தன், சுஜாதா வரிசையில் நீங்களும் இடம் பெறுவது நிச்சயம். நீலம் எழுதி வரும்போது உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இதை எழுதியிருந்தேன் 

 
இதனை உங்கள் நீண்ட நாள் வாசகர் அனைவரும் உணர்ந்திருப்பர். உங்களுக்கு புதிதாக எழுதும் இளம் வாசகர்களின் கடிதங்களைப் படிக்கையில் அவர்கள் உங்களை அடைந்த தருணத்தை என்னாலும் உணர முடிகிறது. வெண்முரசு மூலமாகவே தமிழின் மீது, தமிழ் ஓசையின் மீது பெருங்காதல் கொண்டு பல புதிய எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கப் போகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. தித்திக்கும் தமிழ் என்று மேடைப் பேச்சாளர்கள் பேசும் போது பகடி செய்து நகைத்திருக்கிறேன். தமிழ் தித்திப்பது உண்மையே என்று காட்டியதுக்கு நன்றி ஜெ.


அன்புடன் 

சிவா