Saturday, February 13, 2016

அரக்கனும் குழந்தையும்






ஜெ

ஜராசந்தனின் ஆளுமை துலங்கிவருவதைக்கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. அவன் ஒரு பழங்குடி. கூடவே பெரிய அறிஞன். பெரிய நிர்வாகி. குரூரமானவன். ஆனால் சின்னப்பையனும்கூட. உண்மையில் இந்தக்கலவை மிக ஆச்சரியமானது என்றாலும் அடிக்கடிக் கானக்கிடைப்பது. பெரிய தொழிலதிபர்கள் இப்படி இருப்பதைக் கண்டிருக்கிறேன் அவர்களைப்புரிந்துகொள்வது மிகவும் கடினம்

நான் வேலைசெய்த ஒரு நிறுவனத்தலைவர் இப்படிப்பட்டவர். தொழிலாளர்களுடன் வாழ்வார். கெட்டவார்த்தை பேசுவார். ஆனால் லாபமே குறியாக இருபபர். கொஞ்சம் பிரச்சினை என்றாலும் மரண அடிதான்

மனோகரன்