Friday, February 26, 2016

அங்கத்தின் தத்துவம்





அன்புள்ள ஜெ

அர்ஜுனனும் கிருஷ்ணனும் கிண்டலடிக்கப்பட்டபடியே வரும் அங்கதநாடகத்தில் நிழலாக இருந்து அர்ஜுனன் உருவாகும் இடம் எனக்கு ஒரு சிலிர்ப்பை அளித்தது. அடாடா என நினைத்தேன். அதன் பின்னர்தான் அத்தனை நுட்பங்களையும் சென்று வாசித்தேன். சங்கு சக்கரம் வருவது, திரௌபதி நாராயணியாகத்தெரிவது, அரங்குசொல்லியின் தலையிலேயே கவிஞன் முளைப்பது என எத்தனை நுட்பமான விளையாட்டுக்கள்

அதிலும் கிருஷ்ணனே அனைத்தும் என ஆகும் இடம், நாடகத்தை எழுதி நடிப்பதும் பார்ப்பதும் அவனே என்னும் இடம் கிளாஸ்

என். ஆர். முகுந்தராஜ்