Sunday, February 28, 2016

அரங்குசொல்லி





அரங்குசொல்லி என்னும் கதாபாத்திரம் சம்ஸ்கிருத நாடகத்தில் மிக முக்கியமானவன். தெருக்கூத்து போன்ற நாடகங்களிலும் அவன் முக்கியமானவன். அவன் நம் சமகாலத்தையும் நாடகம் நடக்கும் காலத்தையும் இணைப்பவன். காலங்களை இணைப்பவன். இடைவெட்டுக்கள் எல்லாமே அவனால்தான் நிகழ்த்தப்படும்.

அரங்குசொல்லி இந்த நாடகத்தில் மிகமிகநுட்பமாக விளையாடுகிறான். உரியநேரத்தில் ஒரு சாமானியனாக தன்னை உணர்ந்து திரும்பிச்செல்கிறான். தன் எளியகூட்டுக்குள் அவன் செல்வது அரிய இடம். பெருங்காற்றுகள் வாழும் வானத்தின் கீழ் எந்நம்பிக்கையில் பறவைகள் கூடுகட்டுகின்றன என்பது மகாபாரதப்பின்புலத்தில் மகத்தான ஒரு வரி

சுவாமி