Tuesday, February 23, 2016

வஞ்சவிதை





ஜெ
கர்ணனின் ஆளுமையில் மெல்ல உருவாகி வரும் திரிபு ஒருவகையான பதற்றத்தை அளிக்கிறது. கதை தெரிந்ததுதான். அவன் மிகப்பெரிய வீழ்ச்சி ஒன்றைநோக்கிச் செல்கிறான். அவன் தான் பாஞ்சாலி அவமானப்படுவதற்குக் காரணம். ஆனாலும் அந்த வீழ்ச்சி அச்சுறுத்துகிறது. ஏனென்றால் அது எந்த மனிதருக்கும் நிகழக்கூடிய ஒரு வீழ்ச்சிதான் என்பதுதான்

அந்த வீழ்ச்சியை அவன் வஞ்சம்தான் நிகழ்த்துகிறது. அவனுடைய எல்லா நல்லியல்புகளையும் அது அழிக்கிறது. அவனை பாம்பாகவே மாற்றிவிடுகிறது. மகத்தான திரிபு இது

ஜெயராமன்