Sunday, February 28, 2016

மாநாகர்






நாகர்களின் உட்போர் பற்றிய செய்திகள் இல்லையேல் காண்டவ அழிப்பை ஒரு வெறும் இனப்போராக ஆக்கிக்கொள்ளமுடியும் என தோன்றுகிறது. நாகர்கள் எதன்பொருட்டு போரிடுகிறார்கள்? அவர்களின் போரெல்லாம் அவர்களுக்குள்ளேயே. அவர்களின் மகாக்குரோதை அன்னை ஏன் கோபம் கொண்டிருக்கிறாள்? யார் மேல் கோபம்?

முன்பு பன்னகர்கள் உரகர்களுக்குச் செய்ததைத்தான் இப்போது நாகர்களுக்கு பிறர் ஒட்டுமொத்தமாகச் செய்கிறார்கள். அப்படிபார்க்கையில் எளிமைப்படுத்தவே முடியாத ஒன்றாக உள்ளது இந்தபோர். நாகர்களை அழித்த அர்ஜுனன் நாகர்குல உலூபியை மணந்தான் என்பதை வைத்து இதைப்புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது

மனோகர்