Friday, February 5, 2016

மரணவிளையாட்டு






ஜெ

இன்றைய வெண்முரசின் முக்கியமான வரிகள் பீமனும் இளம்கௌரவர்களும் நீராடும்போது பெரியதந்தையைக் கொன்றுவிட்டோம் என்றும் அவர் பாதாளத்திற்குச் சென்று மீண்டுவருகிறார் என்றும் அந்தப்பிள்ளைகள் கூச்சலிடுவதுதான்

அவர்கள் அங்கே ஒரு mock war தான் செய்கிறார்கள்.உண்மையில் நிகழப்போகும் போரை அங்கே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் அறியமாட்டார்கள். அதை அறிந்த ஒருவன் குடித்து விழுந்துகிடக்கிறான்

நீருக்கடியில் உள்ள அந்தப்பாதாளத்துக்கு அவன் முன்னாடியே போய்விட்டுவந்தவன். வடிவேலு ஜோக்தான் ஞாபகம் வருகிறது. செத்துச்செத்துவிளையாடுவோமா என்று

செல்வராஜன்