Thursday, February 11, 2016

காலம்



அன்புள்ள ஜெ., 

சென்ற பாராளுமன்றத் தேர்தலின்போது வெண்முரசு எனக்களித்த அரசியல் அனுபவங்கள் அளவற்றவை... யாதவர்களும், ஏகலைவர்களும், குந்திகளும், திருதராஷ்டிரர்களும் கண்முன் வந்துகொண்டே இருந்தார்கள்... வெண்முரசு அந்தத் தேர்தலின் செய்திப்பின்புலமாகப் பல நேரங்களில் பொருள்கொண்டது..

இப்போதும் வாழ்வின் ஒவ்வொரு இக்காட்டான, இடர்ப்பாடான தருணத்திலும் வெண்முரசு மீது முட்டிகொண்டுதான் கடந்துசெல்கிறேன்... ஒருவகையில் மேலோட்டமான வாசிப்பே என்னுடையது.. இன்னும் ஆழ்ந்து இதைவாசிப்பவர்கள் ஏற்கனவே பல வாழ்நாளைக் கடந்திருப்பர்..

இதை எல்லாம் எப்படிப் புரியவைப்பது.. சொல்லிப் புரிவதில்லை வாசிப்புக்கலை போலும்..

நன்றி,
ரத்தன்