Wednesday, February 17, 2016

மூவர்

 
 
ஜராசந்தன் துரியோதனன் கர்ணன் மூவருமே பாஞ்சாலியை வழிபடும் மனநிலையில் தெய்வத்தின் சந்நிதியில் வந்து காத்திருப்பது போல இருக்கிறார்கள். இவர்களுக்கு பாண்டவர்கள் ஒரு பொருட்டே அல்ல. இவர்களின் அதீதமான அளவளாவல் கூட உள்ளிருக்கும் உணர்வெழுச்சியை மறைக்கவும் கடக்கவுமே என்று தோன்றுகிறது. 

ஜராசந்தன் பெண்மையை தலைமேல் வைத்து வழிபடும் குலத்தைச் சேர்ந்தவன். கர்ணன் அதை இன்னும் உன்னதமான மனநிலைக்கு கொண்டுசென்றவன். தன்னுள் இருந்த பெண்மையையே முற்றும் சிதைத்த துரியோதனனோ இன்று அவள் காலடியில் தன் மணிமுடியை சமர்ப்பிக்கும் மனநிலையில் உள்ளான். 

மதுசூதனன் சம்பத்