Sunday, February 21, 2016

நாகவஞ்சம்



ஜெ,

வெண்முரசு வரிசையில் வெய்யோன் வஞ்சங்களின் கதையாக விரிகிறது. ஆரம்பத்திலேயே வஞ்சத்தின் கதை வந்ததை இப்போதுதான் இணைத்துப்புரிந்துகொண்டேன். பரசுராமனின் பெரும் சினத்திலிருந்து தொடங்குகிறது வெய்யோன். நடுவே வந்த அஸ்தினபுரியின் எண்ணூறுகுழந்தைகளின் கொண்டாட்டம் கொஞ்சநாள் இதெல்லாம் பெரிய வஞ்சங்களின் மேல்தான் அமர்ந்திருக்கின்றன என்ற யதார்த்ததை நாம் காணாமலாக்கிவிட்டன

இப்போது நாகங்களின் கதைகள் ஒவ்வொன்றாகக்கூடி கடைசியில் நாகபாசனாகிய கர்ணனில் சென்று முடிவதைக் காணும்போது ஒரு பெரிய முழுமையை கண்ட நிறைவை அடைகிறேன்

சுவாமி