Friday, February 5, 2016

துயர்வெளி






அன்புள்ள ஜெ

இன்றைய அத்தியாயத்தில் அன்னங்கள் நீந்தும்போது கால்கள் தெரிவதில்லை என்பதை மானுட மனத்துடன் ஒப்பிட்டிருந்த உவமை மிக அழகியது. அந்த இடம் அங்கே செயல்படும் மனங்களுக்கு மிக நுட்பமாக பொருந்துவதாக இருந்தது.

அந்த நீராட்டுக்காட்சியே அற்புதமானது. அது ரத்தக்குளம் என்று சொல்லிவிட்டீர்கள். அதில் விழுந்து நீராடிக்கொண்டிருக்கிறார்கள். திளைக்கிறார்கள்.

அதுதான் விதி என்பதை மீண்டும் மீண்டும் பூடகமாகச் சொல்லிச்செல்லும் துயர்மிகுந்த அத்தியாயம்

சரவணன்