Monday, February 8, 2016

மணிமுடி






அன்புள்ள ஜெ

தேவயானியின் மணிமுடி மீண்டும் எழுந்துவருவதைக் கண்டேன். ஒரு பொருள் குறியீடாக ஆகிவிட்டதென்றால் அதை தொடர்ச்சியாக மேலே கொண்டுவந்து வெவ்வேறுவகையில் அர்த்தம்கொள்ளச்செய்துகொண்டே இருக்கிறீர்கள். தேவயானியின் மணிமுடி திரௌபதிக்கு ஒருபொருட்டாகத்தெரியவில்லை என முன்னரே சொல்லிவிட்டிருந்தீர்கள்


ுரியின் உள்ளம் விரிந்துகொண்டே செல்கிறது. அதுதான் இந்தப்பகுதியின் முக்கியமான விஷயம். ஒரு பலூன் போல. அது வெடிக்கப்போகிறதென்பதும் தெரிகிறது. அவன் இங்கே மொத்த நாட்டையும் திரௌபதிக்குக் கொடுக்கத்தயாராகிறான்

அவனுடைய அகங்காரநிறைவுக்காகவே அதைச்செய்கிறான் என நினைத்திருந்தால் இல்லை என தெரிகிறது. அவன் அதை கர்ணனுக்காவே செய்கிறான்

சிவராம்