Friday, February 17, 2017

ஆடல்





ஜெ

தாரை சந்திரன் உறவிலுள்ள நாடகங்களை மீண்டும் ஒருமுறை வாசித்தேன். பலவரிகளை கதைவேகத்தில் கடந்துசென்றுவிடுவோம்.  அவள் அவனை வெறுப்பாதாக நடிப்பது காமத்தை மறைக்க. அவர் அதை தூண்டிவிட்டு அவளைச் சீண்டுவது  ‘மணமாகி நெடுநாளானதனால் இருவர் நடுவே இருந்த உளமாடல் ஓய்ந்து உடற்தழுவல் தோலில் மட்டுமே என்றாகிவிட்டிருந்தது’ என்ற நிலையை கடக்க

இருவரும் கண்களைமூடிக்கொண்டு அதை வளர்த்தெடுக்கிறார்கள். அவள் அவனை தன்னுடன் இணைத்துப்பேசும்போது நாக்கைப்பிடுங்கிச் சாவேன் என்கிறாள். ஆனால் அவருக்கு அப்படிப்பேசுவது பிடித்திருக்கிறது. உண்மையில் அவள் அப்படி செல்லும்போது அவருக்கு அது உள்மனசிலே தெரிந்தும் இருக்கிறது

மனோகரன்