Saturday, February 18, 2017

மொழித்தெய்வம்

வணக்கம்

 


 சில சமயம்  வாசிக்கும் போது சலனம் இல்லாமல் ஆகி விடுகின்றோம்.
 அப்படி பட்ட ஒரு தருணம் இதை . வஸிக்கயில் அமைந்தது.

 “நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு”


 நீங்கள் எழுதும் போது தெய்வங்கள் இறங்கி வரும் போலும்.

நன்றி
ரவி


அன்புள்ள ரவி

மொழி என்பதே  ஒரு தெய்வம்தான். அதில் ஆழ்கையில் அதுவே வரிகளை அளிக்கிறது

ஜெ