Tuesday, February 2, 2016

கடன் தீர்தல்






ஜெ

வெண்முரசின் அத்தியாயங்களில் வெய்யோன் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து உற்சாகமாக ஆகி மேலும் இறுக்கமாக முறுகிக்கொண்டே செல்கிறது

குண்டாசி வரும் அத்தியாயம் அழகும் நுட்பமும் கொண்டது. அதன் காம்போசிஷனைத்தான் நினைத்துக்கொண்டேன். சம்படை உட்பட வதைபட்டு சிறையுண்டு செத்த பெண்களின் கதைகளிலிருந்து மெல்ல குண்டாசிக்கு வந்து கூட்டமாகச் சாகப்போகிறார்கள் என்று சொல்லி முடிகிறது

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் செல்வத்தை தேய்க்கும்படை என்பது ஞாபகம் வந்தது

செல்வராசன்