Wednesday, February 3, 2016

ரத்தம்







அன்புள்ள ஜெ

நாம் முன்பு ஊட்டிக்கூட்டத்திலே சந்தித்திருக்கிறோம். இது நான் எழுதும் முதல்கடிதம். பத்தாண்டுகள் கழிந்துவிட்டன. வெண்முரசை பிந்தித்தான் வாசிக்க ஆரம்பித்தேன். வெய்யோன் வரைவந்துவிட்டேன். வெய்யோனில் குண்டாசி சொல்லும் இடத்தைத்தான் வாசித்தேன். நீங்கள் தளையசிங்கம் கதைபற்றிச் சொல்லும்போது எண்பதுகளுக்கு முன்னரே தளையசிங்கம் ஈழத்தில் ரத்த ஆறு வரும் என்பதை ரத்தம் என்னும் கதையிலே சொல்கிறார் என்றீர்கள். அதை நினைவுகூர்ந்தேன். இதை எழுதவேண்டுமென நினைத்தேன்

ஆர்.முருகேசன்