Monday, May 4, 2015

இரும்புயுகம்



ஆசிரியருக்கு ,

வெண் முரசில்   ஒவ்வொரு சூதர்பாடலும் அது எழும் தருணத்துடன்  தொடர்புடையது, அப்படித்தான் அம்பை-தாட்சாயணி  துவங்கி முதலிரவுகளுக்கு முன் அமைந்த பாடல்கள் வழி இப்போது தீர்கசியாமரின் கலியுகம்  இரும்பின் யுகம் என்பது வரை .

இப்படி கட்டித் தழுவிக் கொண்டிருப்பவர்கள் எப்படி வெட்டிக் கொள்கின்றனர் , இது கலி யுகம் இரும்பாய் வன்மம் தேங்கிய துரியன் ஒரு கலி நாயகன், அவனை மீறியது அவனுக்குள் முதன்மையாக -பிறருக்குள் சில பிசிறாக. 

அறச் செல்வனான தர்மன் பொன்- வாரனவத எரிப்பில் அவன் 5 வனவாசிகளை பலிகொள்கிறான் சிறிது இரும்பு கலந்துள்ளதை காண்கிறோம், கர்ணனின் மீது வன்மம் கொண்ட  பீமன் வெள்ளி- குண்டாசியைத் தழுவும்போது அவனுள் இருக்கும் அகலாத  இரும்பை நாம் காண்கிறோம், பெண்களை வெறுத்து பொருட்படுத்தாதவன் அர்ஜுனன் செம்பு-அஸ்வத்தாமன் மீது அம்பெய்யும்போது அவனுள்  இருக்கும் இரும்பைக் காண்கிறோம்.  வாரனவதைனாலும் , காம்பில்ய முற்றுகையினாலும்  துரியன் இரும்பு-  கர்ணனையும் பூரிசிரவச்சையும் இப்போது பாண்டவர்களையும் தழுவிக் கொள்ளும் போது அவனிடம் நாம் காண்பது ஒரு பொன் வெளிச்சம். 

கிருஷ்ணன்.