Sunday, May 3, 2015

சுழல்வழி






ஜெ சார்

வெண்முரசில் கதைகள் மடிந்து மடிந்து வந்து தொட்டுக்கொள்வதை நினைத்தால்தான் ஆச்சரியம். தீர்க்கசியாமர் வெண்முரசில் இறப்பது கலிபுருஷன் வந்து துர்யோதனனாகப் பிறப்பதைப்பார்த்து பயந்து நடுங்கித்தான். அவரது சாவுக்கே த்ருதராஷ்ட்ரர் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போதுதான் ஒரு சார்வாகன் வந்து அவருக்கு ஆலோசனை வழங்குகிறான்

இப்போது எல்லாம் சுமுகமாக முடியும்போது அதே தீர்க்கசியாமர் வேறு ஒரு வடிவத்திலே வந்து நின்று கலிபிறப்பதை எச்சரித்துவிட்டுச் செல்கிறார். அவரை அங்கே கொண்டுவந்ததில் உள்ள பொருத்தத்தை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.

செல்வா