Tuesday, May 5, 2015

கர்ணனின் அவமதிப்பு



அன்புள்ள ஜெ,

கர்ணனின் தனிமையில் வந்து வெண்முகில்நகரம் முடிவடையும்போது பெரிய அளவில் ஒரு சோர்வு ஏற்பட்டது. எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லாமே சிறப்பாக முடிந்துவிட்டது. ஆனால் கர்ணனின் தீ அடங்கவே அடங்காது. அதை உணரும்போது அவனுடன் மனம் இன்னமும் நெருக்கமாக உணர்கிறது

கர்ணன் குதிரைலாயத்தில் போய் அமர்ந்திருப்பது கூட உணர்ச்சிகரமானதுதான். இதெல்லாம் எதற்கு பேசாமல் ஒரு சாதரான சூதனாகவே இருந்துவிடலாமே என்று அவன் நினைக்கிறான். அவனுக்கு இதில் இருந்து வெளியே செல்லும் வழி தெரியவில்லை

அவனுடைய ஈகோவை வைத்துப்பார்த்தால் பாஞ்சாலிக்கு அகம்படியாக வாள் ஏந்தி அவன் செல்வது என்பது எவ்வளவு பெரிய இழிவு என்று நினைக்க முடியும். அவனுடைய உணர்ச்சிகளைப்புரிந்துகொள்ளவும் முடியும்

ஜெயராமன்