Wednesday, July 4, 2018

கலி




ஜெ

போர் நெருங்கிவரும் சூழலில் ஒன்றைப் பார்க்கமுடிகிறது. இப்போது கணிகரோ சகுனியோ அதை நடத்தவில்லை. எல்லாவற்றையும் துரியோதனனே நடத்துகிறான். கலி அவனில் குடியேறும் அந்தக் காட்சிக்குப்பின்னர் அவனுக்கு துவாபரனின் உதவி தேவைப்படவில்லை. அறிவார்ந்த உரையாடலோ அல்லது சூழ்ச்சியோ அவனுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. எங்குமே தயங்காதவனாக இருக்கிறான். யோகி போல ஒரே எண்ணமாக நேராகப் போரை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறான்


சுந்தர்