Thursday, July 5, 2018

துரியோதனன் வஞ்சினம்


ஜெ



எந்த ஒரு விஷயத்தையும் ஒருவகையான அறமாக மாற்றிக்காண்பித்துவிடமுடியும் என்று என் ஆசிரியர் சொல்வதுண்டு. அவரிடம் நான் யோகா கற்றுக்கொண்ட நாட்களில் அவர் சொல்வார். நாம் நம்பிவிட்டால் நம்மால் பிறரையும் நம்பவைக்கமுடியும். நாம் நம்புவதற்கு ஒரே வழி மீண்டும் மீண்டும் நாமே சொல்லிக்கொள்வதுதான்.

துரியோதனன் வஞ்சினம் சொல்லும்போது சொல்லும் வரிகளை வாசித்தபோது மிகச்சரியாகவே எனக்குப் பட்டது


அதன்பின்னர்தான் இது கலிதேவன். மனிதன் கிடையாது. அவனால் எதையும் நம்பவைக்கமுடியும். விழுந்துவிடாதே என நானே சொல்லிக்கொண்டேன். துரியோதனன் அந்த சபையில் உள்ளவர்களை பித்துப்பிடிக்கச் செய்வது மிக இயல்பானதுதான்

சாரங்கன்