Tuesday, August 27, 2019

தெய்வங்கள் 2


அன்புள்ள ஜெ

தெய்வங்கள் பற்றிய கடிதம் கண்டேன். நானும் இதை எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். வெண்முரசில் தெய்வங்களே என்று கூவுகிறார்கள். ஆனால் அதை தெய்வங்களை மட்டுமே சொல்வதாகக் கூவுவதே இல்லை. கூடவே மூதாதையரே என்றும் கூவுகிறார்கள். தெய்வங்களுக்குச் சமானமகாவே மூதாதையரும் இருந்த காலகட்டம். தென்புலத்தார், தெய்வம் என்றுதானே குறளும் சொல்கிறது

அதிலும் ஒரு நுட்பம் உள்ளது. பெண்வழிச்சமூகங்களில் மூதன்னையர் என்ற சொல் உள்ளது. குந்தி மட்டுமல்ல காந்தாரிகூட தெய்வங்களே மூதன்னையரே என்று கூவுகிறார்கள். அன்றைய சமூக அமைப்பில் மதம் வகித்த பங்கை இது சொல்கிறது என நினைக்கிறேன். இந்த கோணத்தில் ஒவ்வொருவரும் எந்தெந்த தெய்வங்களை எப்படி அழைக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்

ராமச்சந்திரன்