Tuesday, August 27, 2019

கனவு



அன்புள்ள ஜெமோ

தீயின் எடை முடியும்போது ஒரு அற்புதமான அனுபவம். எதிர்மறையாகவே சொல்லவேண்டும். எல்லாருமே செத்து நகர்மேல் எரிமழை விழுந்து பெரிய அழிவு. ஆனால் அதுகூட அழகியலுடன் அமைந்துள்ளது. அந்த ரத்தமழையும் மண்மழையும் இருட்டும் ஒரு பெரிய கனவுபோல அமைந்துள்ளன. அதை வாசிக்கையில் மகாபாரதம் என்னும்போது நாம் ஒரு கனவு காண்போமே அந்தக்கனவையே கண்டதுபோன்ற உணர்வு உருவானது. இதுதான் மகாபாரதத்தின் பெரிய விரிவான காட்சி என்று தோன்றியது. மகாபாரதம் நிகழ்ந்தகதை. ஆனால் வெண்முரசு அதை விரிவாக்கிக்கொண்டுசென்று மேலும் பல அடுக்குகளை உருவாக்கி பின்னிக்கொண்டே செல்கிறது. இந்த ஒரு அத்தியாயத்தில் எத்தனை முடிச்சுகள். கைவிடுபடைகள் எழுவது. முன்பு ரத்தமழை பெய்தபோதும் கைவிடுபடைகளில்தான் பெய்தது. காகங்கள் வந்திருப்பது. நரிகளின் ஊளை. எல்லாமே பிரம்மாண்டமான கனவுபோலிருந்தது

முருகேஷ்