Friday, August 30, 2019

எந்தத் தீ?



அன்புள்ள ஜெ,

தீயின் எடை என்ற தலைப்பு எதைக்குறிக்கிறது என்று ஆரம்பம் முதலே எண்ணிக்கொண்டிருந்தேன். நாவல் முடிந்தபோதுதான் குடியை முழுமையாகவே தின்று முடித்த தீயைத்தான் சொல்கிறது என்று தெரிந்துகொண்டேன். திரௌபதி மட்டும் அல்ல. அவள் நிமித்தம்தான். முதற்கனல்தான் அந்தத் தீ. இங்கே கடிதம் எழுதிய பலரும் அதைச் சொல்லவே இல்லை. ஆரம்பத்தில் நாவலில் வந்த அந்தக்கனல் எரிந்து எரிந்து குருசேத்திரன் முழுக்க எரித்து இப்போது அவர்களின் குடியையே முழுமையாக எரித்து அழித்துவிட்டது.