Saturday, August 24, 2019

அபிமன்யூ 5




ஜெ,

அபிமன்யூ பற்றிய கடிதங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். இது எனக்கு தோன்றியது. இது என்னுடைய வெறும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் இப்படியும் வாசிக்கலாம் என நினைக்கிறேன். அபிமன்யூ திரௌபதியின் கனவிலே வந்துகொண்டே இருக்கிறான். ஏன் வருகிறான்? அவன் அவளுக்கு நெருக்கமானவன் என்பது ஒரு பக்கம். அதைவிட முக்கியமானது அவன் அவள் கனவில் வருவது அவள் மைந்தர்களை அழைத்துச்செலவதற்கு. அவர்களை விளையாட கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவர்கள் வருவார்களா என்றே கேட்டுக்கொண்டிருக்கிறான். அப்படி ஏன் கனவு வருகிறதென்றால் அது அவளுடைய ஆழத்திலுள்ள ஆசை என்பதனால்தான். அவன் இறந்ததும் எப்படியோ தன் மகன்கள் வாழ்வதில் அறமில்லை என அவளுடைய ஆழத்தில் மனசாட்சிக்குத் தோன்றிவிட்டது. அவளுடைய சபதத்திற்காக அவன் செத்தான். அதன்பின் இந்த ஐந்துபேரும் வாழ்வதில் அர்த்தமில்லை. ஆகவேதான் அவளுக்கு அவன் வந்து அவர்களை அழைத்துச்செல்வதுபோல கனவு வந்துகொண்டே இருக்கிறது

ராமச்சந்திரன்