Wednesday, August 21, 2019

கீழ்மை



ஜெ


சில உதிரி வரிகளில் மகாபாரதக் கதாபாத்திரங்களின் ஒட்டுமொத்த மன ஆழமும் அதிலுள்ள எல்லா நாற்றங்களும் வெளிவருவதை வெண்முரசிலே காணலாம். அதற்குச் சிறந்த உதாரணம் கிருதவர்மன். அவன் ஒரு நல்ல கதாபாத்திரமாக வந்ததே இல்லை. அவனுடைய பிரச்சினை அவனுக்கும் யாதவர்களுக்கும் நடுவே நடந்ததுதான்

ஆனால் அவன் திரௌபதியின் மைந்தரைக்கொல்வதுபற்றிச் சொல்லும்போது

மைந்தர்கள் எரிவதை பாஞ்சாலத்தாள் காணட்டும்… குருதிபடிந்த குழலை புகையிட்டு உலர்த்தட்டும்

என்று சொல்கிறான், அவனுக்கு அங்கே திரௌபதியின் மைந்தர் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் நோயுற்றிருக்கிறார்கள் என்றும் தெரியும். அவர்களைக் கொல்வதில் எந்த தயக்கமும் இல்லை.வெண்முரசில் முதலில் அவர்கள் பாண்டவர்களைக் கொல்லத்தான் கிளம்பினார்கள் என வரும். ஆனால் கிருதவர்மனுக்கு தெரியும் என்பது இந்த வரிகளிலிருந்து தெரிகிறது

ஆகவே கடைசியாகஅ ஸ்வத்தாமனுக்கும் தெரியும். இந்த வரியில் தெரிவதுகிருதவர்மனுக்கு பாஞ்சாலிமீது இருக்கும் வன்மம், அல்ல பாண்டவர்கள்மீதான கோபமோ துரியோதனன் மீதான பற்றொ அல்ல. ஒரு கொடூரச்செயலைச் செய்யப்போகும் கொண்டாட்டம்தான். அவனுடைய அந்த இளிப்பு கொடூரமானது

எஸ்.சிவக்குமார்