Tuesday, August 20, 2019

அம்பிமன்யூ




ஜெ,

வெண்முரசில் சில இடங்கள் கதையோட்டத்தில் எண்ணமாக வந்துசெல்லும். பலசமயம் அவை பெரிய ஒரு நிகழ்ச்சிக்கு முன்னாலும் பின்னாலும் வரும். நாம் அவற்றை கடந்துசென்றுவிடுவோம். ஆகவே நான் எப்போதுமே அப்படி வரும் பகுதிகளை தனியாக எடுத்து ஃபைல் போட்டு வைத்துவிடுவேன். குருக்ஷேத்திரப்போர் முடிந்து மேலே என்ன நடக்கும் என்ற பதற்றம் நிலவும் இடத்தில் திரௌபதிக்கும் அபிமன்யூவுக்குமான உறவு வருகிறது. அவளுக்கே ஐந்து மைந்தர்கள் இருந்தாலும் அவளுக்கு மனசுக்குள் பிடித்த மகனாக அபிமன்யூதான் இருக்கிறான். ஏனென்றால் அவன் இரண்டு பேரின் கலவை. அர்ஜுனனும் கிருஷ்ணனும். இரண்டுபேருமே அவளுக்குப் பிடித்தமானவர்கள்.

அபிமன்யூவுக்கும் திரௌபதிக்குமான உறவின் அவன் எப்படி அவளைப்பார்த்தான் என்பதும் முக்கியமானது. அவன் அவளைத்தான் தனக்குச் சமானமானவனாக பார்க்கிறான். அவளுடைய நிமிர்வு அவனுக்கு தன் அம்மாவாக இருக்கும் தகுதிகொண்டவளாக அவளைக் காட்டுகிறது. நுட்பமான ஒரு விஷயம் இது. இந்த உறவு மேலும் பல வரிகள் வழியாகத் தொட்டுத்தொட்டுச் சொல்லப்படுகிறது. அந்த வரிகளை தனியாக எடுத்து தொகுத்து வாசித்தால்தான் முழுமையான ஒரு சித்திரம் கிடைக்கிறது

ஆர்.லக்ஷ்மி