Tuesday, August 27, 2019

குருதிமழை



அன்புள்ள ஜெ

வெண்முரசு முடியப்போகிறது. அது நகுலனில் வந்து முடியும் என்றுதான் நானும் எதிர்பார்த்தேன். அஸ்தினபுரியில் முடியும் என்றும் நினைத்தேன். துரியோதனன் இல்லாத அஸ்தினபுரி. அதில் அந்த குருதிமழை பெய்கிறது. 11 ருத்ரர்கள் எழுகிறார்கள். திருதராஷ்டிரர் காந்தார நாட்டிலிருந்து வந்தபோது அந்த குருதிமழை பொழிந்தது. அதில் கைவிடுபடைகள் நனைந்தன. அதன்பின்னர் இப்போது பெய்கிறது. இந்தக்குருதிமழை ஒரு பெரிய குறியிடாக அப்போதிலிருந்தே நின்றுகொண்டிருக்கிறது. அது எதைக்குறிக்கிறது, அந்த ரத்தம் எவருடையது என்பதெல்லாமே புரிந்துகொள்ள முடியாதது. ஆனால் விதி என்று மட்டும் அதைப்புரிந்துகொள்ளலாம் என்றும் தோன்றுகிறது

சாந்தகுமார்