Friday, August 23, 2019

அநீதி


அன்புள்ள ஜெ,

திருஷ்டதுய்ம்னனை அஸ்வத்தாமன் கொல்லும் இடம் மிகக்குரூரமானது மிதித்து மிதித்தே கொல்லும் காட்சியை வாசிக்கவே பயங்கரமாக இருந்தது. ஆனால் அதை மறக்கவும் முடியவில்லை. தன் ஆசிரியரின் தலையையே வெட்டி வீழ்த்திய திருஷ்டதுய்ம்னன் அப்படிக்கொல்லப்படுவது நியாயம்தான். ஆனால் இதே அத்தியாயத்தில் கிருபர் வந்து தன் மாணவர்களைக் கொடூரமாகக் கொலைசெய்கிறார். இதை எப்படிப்புரிந்துகொள்வது? கிருபரின் மனநிலை ஒருபக்கம் இருக்க ஒரு அநீதியை சமானமான அநீதியாக் சமன்படுத்த முடியுமா என்ன? இங்கே எட்டுமடங்கு அநீதி அல்லவா நிகழ்கிறது? அநீதி அநீதியை வளர்க்கும் என்பார்கள் அதைத்தான் சொல்லத்தோன்றுகிறது

சுவாமி