Saturday, August 24, 2019

தெய்வங்கள்


ஜெ

ஒரு சின்ன யோசனை வந்தது. சரியா என்று தெரியவில்லை. வெண்முரசில் ஒருவர் கூட “தெய்வமே” என்று கூவவில்லை. “தெய்வங்களே” என்றுதான் கூவுகிறார்கள். ஆனால் இன்றைக்கு தெய்வங்களே என்று யாரும் கூவுவதில்லை. க்டவுளே என்றுதான் சொல்வார்கள். அல்லது முருகா என்றோ பெருமாளே என்றோ கூவுவார்கள்.

அன்றைக்கு ஒருதெய்வக்கோட்பாடே இல்லை என நினைக்கிறேன். ஆகவே தெய்வங்கள் ஏராளமாக இருந்திருக்கிறார்கள். இன்றைக்குத்தான் ஓரிறை கோட்பாடு வந்துள்ளது. அதாவது பகவத்கீதைக்குப்பின்னாடிதான். மகாபாரதகாலகட்டத்தில் எல்லாருமே சமானமான தெய்வங்கள்தான். இன்றைக்கு பெருந்தெய்வமாக சிவனோ பெருமாளோ வந்தபின் மற்ற தெய்வங்களெல்லாம் பரிவாரதேவதைகள் ஆகிவிட்டார்கள்.

இன்றைக்கும் நாம் பலதெய்வ வழிபாடுதான் செய்கிறோம். ஆனால் அந்த பலதெய்வங்களையும் நீதான் முழுமுதல் ஒரேதெய்வம் என்று சொல்லி வழிபட்டுக்கொண்டிருக்கிறோம்

சிவராஜ்