Friday, August 23, 2019

பாண்டவர்களின் மைந்தர்கள்



ஜெ

வெண்முரசில் போர் உருவாகும் போது வந்த நாவல்களில் பாண்டவர்களின் மைந்தர்களை விரிவாகச் சொல்லிக்கொண்டே சென்றீர்கள். ஏன் பாண்டவர்களைப்பற்றிச் சொல்லாமல் இவர்களைப்பற்றி இவ்வளவு சொல்கிறீர்கள் என நான் எண்ணியதுண்டு. ஏனென்றால் அவர்கள் மூலத்தில் மிகச்சின்ன கதாபாத்திரங்கள். அதாவது பெயர்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. குணச்சித்திரமே இல்லை.

ஆனால் இப்போது தெரிகிறது பாவபுண்ணியங்களைப் பற்றிப்பேசினால் பிதாமகர்களைப்பற்றி மட்டும் பேசினால் போதாது,. மைந்தர்களைப்பற்றியும் பேசியாகவேண்டும். பாண்டவர்களின் மைந்தர்கள் அபாரமான கதாபாத்திரங்களாக அமைந்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் துல்லியமான குணச்சித்திரத்தை மெல்லமெல்ல உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

இந்த எல்லா மைந்தன் கதாபாத்திரங்களும் அவர்களின் அப்பாக்களின் இயல்பைக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைகளும் உள்ளன. அவர்களை அவர்களின் அப்பாக்களின் நீட்சி என்று சொல்லலாம். ஆனால் அப்பாக்களை மீறிச்செல்லும் இடங்களும் முக்கியமானதாக உள்ளது


மகேஷ்