Saturday, August 31, 2019

போர் நிறைவு




அன்புள்ள ஜெ,

மகாபாரதப்போர் இத்தனை நாளாக நடந்திருக்கிறது. 18 நாள் போர் ஐநூறுநாட்களாக நடந்திருக்கிறது. இது முடியும்போது ஒரு பெரிய வாழ்க்கைநாடகத்தையே பார்த்த உணர்வு உருவாகிறது. இவ்வளவுபெரிய நிகழ்வு. இதுதான் ஒரு எபிக் சொல்லும் சித்திரமாக இருக்கமுடியும். படிப்படியாக விரியும் பலநூறு சித்திரங்கள். இதற்குள் துணைக்கதைகள், புராணங்கள் எவ்வளவு வந்திருக்கும் என எண்ணிப்பார்க்கிறேன். மகாபாரதம் அளிக்கும் மலைப்பையே இன்னும் பெரிய அளவில் அடைவதுபோலத் தோன்றுகிறது. என் மனசில் இப்போதே வெண்முரசின் நிறைவு வந்துவிட்டது

ஆர். சிவசுப்ரமணியம்