Friday, August 16, 2019

தேனாபிஷேகம்




போர்க்களக் காட்சிகளை வாசித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று பழைய நினைவு. மழைப்பாடலில் பாண்டு தன் மைந்தர்களை உடலெங்கும் சுமந்துகொண்டு தலையில் தேன்தட்டுகளைச் சுமந்து வந்துகொண்டிருக்கும் காட்சியை நினைவுகொண்டு தேடிப்பார்த்து கண்டுபிடித்து வாசித்தேன். அவன் மனசில் இருந்த இனிப்புதான் அந்த தேன் என்று எனக்கு இப்போதுதான் புரிந்தது. தேனாபிஷேகம் என்பார்களே அதுதான். அப்போது அவன் அடைந்த அந்த மகிழ்ச்சிக்கு இணையே இல்லை. அத்தகைய ஒரு மகிழ்ச்சியிலிருந்து இன்றைக்கு இவ்வளவு பெரிய அழிவு வரை வந்துசேர்ந்திருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க்கையின் இந்த ஓட்டம்

சக்தி