Saturday, August 17, 2019

அசுரர்




அன்புள்ள ஜெ

துரியோதனன் இறந்த அந்தக்காட்டிலேயே அத்தனை அசுரமன்னர்களும் இருப்பதைப்பற்றிய காட்சி மனம்கலங்க வைத்தது. அந்தக்காட்சியை கன்ஸீவ் செய்திருந்த விதமே அழகாக இருந்தது. அது விதுரர் அடையும் மனப்பிரமையாகவும் இருக்கலாம். மின்மினிகளின் அசைவில் அவர் விரும்பியதை வாசித்திருக்கலாம். ஆனால் அந்தக்காட்சியின் அர்த்தமே வேறுதான். அங்கே பேசும்போது அசுர மன்னர்கள் நல்ல அரசரகள், நல்ல அரசர்களில் கொஞ்சம் அசுர ரத்தம் உண்டு என்று வந்தது.

அதைப்பற்றி நினைத்துக்கொண்டேன். நம் நினைவில் இந்த அசுர மன்னர்கள் எல்லாம் ஏன் இன்னும் வாழ்கிறார்கள்? அவர்களை நாம் கலைகளில் போற்றிக்கொண்டேதான் இருக்கிறோம். கேரளத்தில் மாபலி சக்கரவர்த்தியை கேரளத்தை ஆட்சிசெய்தவர் என்றே வழிபடுகிறார்கள். மகாபலி நாட்டை ஆட்சிசெய்யும்போது எல்லா மனிதர்களும் சமானமானவர்களாக இருந்தார்கள் என்று பாடுகிறார்கள். மகாபலி மேலே வரும்நாள்தான் திருவோணமாகக் கொண்டாடப்படுகிறது அசுரர்கள் ஏன் வழிபடப்பட்டார்கள் என்றால் இந்த ஆட்சியால்தான் என தோன்றுகிறது

ராஜ் அருண்