Sunday, August 18, 2019

உமித்தீ




அன்புள்ள ஜெ

குருக்ஷேத்திரப்போர் முடிந்தபின் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் எதிர்வினையாற்றுகிறார்கள். அர்ஜுனன்தான் கிட்டத்தட்ட செத்தவன் போலவே ஆகிவிட்டான். அவனுக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவன் கர்ணனைக் கொன்றதுமே தானும் செத்துவிட்டான். அதேபோல பீமனும் துரியோதனனை கொன்றதும் தானும் செய்த்துவிட்டான். நிறைவேறியவர்கள் எல்லாருமே அணைந்து கரியாக ஆகிவிட்டார்கள். நோக்கம் நிறைவேறாமல் அலைபவர்கள்தான் எரிந்துகொண்டே இருக்கிறார்கள். அஸ்வத்தாமம் உமித்தீ போல உள்ளூர எரிகிறான். கிருபர் பொறிகளாக கிளம்பி அலைபாய்ந்துகொண்டே இருக்கிறார். கிருதவர்மன் பொருமி எரிகிறான். போர் எல்லாரையுமே மாற்றிவிட்டது. போர்க்களத்தை முற்றிலும் புதிய ஒரு கோணத்திலே பார்க்கவைக்கிறது வெண்முரசு

சிவராஜ்