Thursday, August 15, 2019

தீ




அன்புள்ள ஜெ

துரியோதனனின் சிதையில் இருந்து எடுக்கப்பட்ட தீயுடன் அஸ்வத்தாமன் செல்லும் காட்சி கொந்தளிப்பை உருவாக்கியது. மூன்றுபேரும் மூன்று நிலையில் இருக்கிறார்கள். கிருபர் சமநிலை இழந்து கொந்தளிக்கிறார். கிருதவர்மன் குரூரமான வெறியுடன் இருக்கிறார். ஆனால் மூவரிலும் அஸ்வத்தாமன் தான் உச்சகட்டமாக அமைதியுடன் இருக்கிறார். அவர்தான் அத்தனைபெரிய அழிவைச் செய்யப்போகிறார். அவருடைய அந்த அமைதிதான் பயங்கரமாக உள்ளது. அவரை சாஸ்வதமாக ஆக்குவது அந்த அழியாத வன்மம்தான்

செந்தில்குமார்