Thursday, August 29, 2019

கைவல்யன்



அன்புள்ள ஜெ

தீயின் எடை முடியும்போது மனதை அழுத்தும் சித்திரமாக எஞ்சியிருப்பது களத்தில் கிடக்கும் பீஷ்மர்தான். முற்றாகவே கைவிடப்பட்டு தன்னந்தனிமையில் வானைநோக்கியபடி கிடக்கிறார். அந்த படுக்கை அம்புப்படுக்கை. எனக்கு குருக்ஷேத்திரமும் பீஷ்மரும் ஒன்றுதான் என்று தோன்றியது. அம்புப்படுக்கை என்பது எவ்வளவு பெரிய குறியீடு என எண்ணி எண்ணி வியந்துகொண்டே இருந்தேன். அவருடைய மொத்த வாழ்க்கையும் கனவுபோல கலைந்துவிட்டது. அவர் தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பதும் அவ்வாறே மறைந்துவிட்டது. அவர் மட்டும் எஞ்சியிருக்கிறார். கேவலமுக்தி என்று சைவத்திலே சொல்வது இதுதான் என நினைக்கிறேன்

சிவக்குமார்.டி