Saturday, August 17, 2019

அஸ்வத்தாமனின் வெறி



அன்புள்ள ஜெ

“ஆசிரியரே! ஷத்ரியன், ஆசிரியரே. நான் ஷத்ரியன், ஆசிரியரே!” என்ற திருஷ்டதுய்ம்னனின் குரல் செவிகளை விட்டு போகவில்லை. இந்நாவலில் மிகப்பரிதாபமான இடம் இதுதான். போர் தொடங்கிவ்ட்டால் மாறிமாறி குரூரம் அடைந்தப்டியே சென்று இப்படித்தான் சமானமே இல்லாத க்ரூரத்தில் சென்று முடியும். அதைச்செய்யும் அஸ்வத்தாமனின் வெறியை எண்ணிப்பார்க்க முடியவில்லை. அவன் தந்தை கொல்லப்பட்டபோது தெளிவாகத்தான் இருந்தான். அதன்பின்னர்தான் இப்படி ஆகிவிட்டன். அவனுக்குள் தான் நெறிநிற்பவன் என்ற நிமிர்வு இருந்தது. நெறிகளுக்கெல்லாம் பொருளே இல்லை என்ற எண்ணம் வந்ததுமே ஊஞ்சல்போல மறு எல்லைக்குச் சென்றுவிட்டான்.

அஸ்வத்தாமன் ஆரம்பம் முதலே பேசாதவனாகவும் உள்ளொடுங்கியவனாகவும் இருக்கிறான். அத்தகையவர்கள்தான் இந்தப்பெரிய க்ரூரத்தைச்ச் செய்யமுடியும் அவர்கள் பேசாமலிருப்பதே அவர்களுடைய எல்லா உணர்ச்சிகளையும் ஒன்றாகத் திரட்டிக்கொள்வதற்காகத்தான். அஸ்வத்தாமனின் குணச்சித்திரத்தை ஆரம்பம் முதலே தொட்டு வாசிக்கவேண்டும்

சாரங்கன்