Thursday, August 22, 2019

அபிமன்யூ 3




ஜெ

அபிமன்யூவுக்கும் திரௌபதிக்குமான உறவைப்பற்றிய இடம் மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது. நான் அதை தனியாகவே வாசித்தேன். திரைபதியின் குருதி ஆசையைச் சொல்லி வந்த அத்தியாயம் அவளைப்போலவே ரத்ததில் விளையாடும் அபிமன்யூவை காட்டுகிரது. இருவரும் சேர்ந்தே ரத்தத்தில் கால்நனைத்து விளையாடுகிறார்கள். அபிமன்யூவும் அவளைப்போலவே ரத்தப்பிரியனாக இருக்கிறான். அபிமன்யூ திரௌபதியின் ஆண்வடிவம் மாதிரி இருக்கிறான். அந்தக்காட்சி சுருக்கமாகக் கடந்துசென்றாலும் வெண்முரசில் இதுவரை வெளிவந்த இருவரின் குணச்சித்திரங்களை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் முக்கியமான கீ என்று சொல்லமுடியும்

மகாதேவன்