Tuesday, August 20, 2019

குருதி




அன்புள்ள ஜெ,

இந்த அத்தியாயம் அதிர்ச்சியுறச் செய்தது. ஆனால் சென்ற இரண்டுநாட்களாகவே கதை நுட்பமாக இங்கேதான் வந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த இடத்தை வந்தடைந்தபின்னர்தான் உணர முடிந்தது. திரௌபதியிடம் தாய்மை கனிந்திருக்கிறது. அவளுக்கு நகரம் பிடிக்கவில்லை. காட்டில் வாழவே விரும்புகிறாள். போரில் அவளுக்கு ஆர்வமில்லை. ஆகவே பழிவாங்குவதிலும் அக்கறை இல்லை. குருதிப்பழி கொருபவள் அவளுக்குள் குடியேறிய மாயைதான். ஏனென்றால் மாயைதான் சபதம்போட்டாள். ஆனால் மாயை அவளுக்குள் இருப்பவள். அவளுடைய ஆல்டர் ஈகோ. அவளுக்குள் இருந்து எழுந்து வந்தவள். ஆகவே அவளும் மாயைதான்.மாயையில் திரௌபதி வரமுடியும் என்றால் திரௌபதியில் மாயையும் வரமுடியும். முதல்முறை துச்சாதனனின் ரத்தத்துடன் பீமன் வந்தபோது அவனை எதிர்கொண்டு அந்த ரத்தத்தை பூசிக்கொண்ட்வள் மாயைதானே ஒழிய திரௌபதி அல்ல.இப்போது துரியோதனனின் ரத்தம் படிந்த ஆடையை எடுத்துக்கொள்பவள் திரௌபதி. அல்லது அவளுக்குள் இருக்கும் மாயை. அவளுடைய ரத்த ஆசை ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. அந்த கதைதான் அபிமன்யூ வழியாக வந்து இந்த இடத்திலே உச்சமடைந்திருக்கிறது

மகேந்திரன்